-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இம்மானுவேல் ஆமோஸ் - சாத்தான் சபையிலிருந்து மீட்கப்பட்ட மனிதனின் சாட்சி

 


சாத்தானை வழிபடுவது பூர்வ காலத்திலிருந்தே நடைபெற்று வந்தது. மந்திரவாதம், இரத்தப்பலி செலுத்துதல் போன்றவை இதைச் சார்ந்ததாகும். இந்நாட்களில் சாத்தான் வழிபாடு மிக அதிக அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. சாத்தான் ஆராதனைக்காக அனேக சாத்தான் சபைகளும் காணப்படுகின்றன.சாத்தான் சபையில் சேருகிறவர்கள் ஆவி உலகத்தோடு சேர்ந்து விடுகிறார்கள். மந்திரவாதம், பில்லி சூனியம் போன்றவைகளால் பல கொடூரமான கிரியைகள் செய்தும் உயிர்ப்பலி,இரத்தப்பலிகள் செலுத்தியும் சாத்தானைச் சேவிக்கிறார்கள். இவ்வாறு சாத்தானுடைய சபையில் சேர்ந்து விட்டவர்கள் மறுபடியும் இரட்சிக்கப்படுவது மிகக் கடினமாகும்.

ஆனாலும் தேவன் அற்புதமாய் சிலரைச் சந்தித்து தமது பணிகளுக்கென பயன்படுத்துகிறார். இப்படிப்பட்டவர்களில் ஒருவரான இம்மானுவேல் ஆமோஸ் என்பவர் குறிப்பிட்டுள்ள தனது அனுபவங்களை Pr.Y.K.P. ஹென்றி அவர்கள்சாத்தானின் ஆரம்பமும் முடிவும்என்ர நூலின் ஒருபகுதியாக கொடுத்துள்ளார்கள். அதிலிருந்து சில அம்சங்கள் இங்கே தரப்படுகின்றன.

இம்மானுவேல் ஆமோஸ்

இம்மானுவேல் ஆமோஸ் என்பவர் ஆப்பிரிக்காவிலுள்ள நைஜீரிய நாட்டின் ஒரு கிராமத்தில் பிறந்தவர். ஏழை கிறிஸ்தவ குடும்பம். பில்லிசூனியக் கட்டுகளால் பெற்றோர் இறந்து விட்டார்கள். அவர்கள் குடும்பத்தில் ஆமோஸ் மட்டும் மீந்திருந்தான். அவனுக்கு வயது 13.

அலீஸ் என்ற பள்ளித்தோழி

ஆமோசுக்கு அலீஸ் என்ற பள்ளித்தோழி இருந்தாள். பள்ளி படிப்பு முடித்தபின் அவள் பெற்றோருடன் பட்டணம் சென்று விட்டாள். கல்வியை முடித்துப் பட்டணத்தில் ஒரு வங்கியில் பணியாற்றி வந்தாள். பசி, பட்டினியிலும், மனிதருடைய கொடுமையிலும் அகப்பட்டு சோர்வுற்றிருந்த ஆமோசுக்கு ஒருநாள் லாகோஸ் பட்டணத்துக்கு தன்னண்டை வரவேண்டும் என்ற ஓர் அழைப்பு அலீஸிடமிருந்து கிடத்தது. அதற்கான பணமும் அனுப்பப்பட்டது. மிக உற்சாகத்தோடு ஆமோஸ் அங்குச் சென்றான். அலீஸின் பெற்றோர் தங்கியிருந்த  வீட்டின் மேல்மாடியில் உள்ள தனது வீட்டில் அலீஸ் ஆமோசைத் தங்க வைத்தாள். அப்போது அவனுக்கு வயது 15 அலீசுக்கு 20 வயது.

அறைக்குள் வினோத செயல்கள்

இந்நிலையில் ஆமோஸ் அலீஸோடு தன் குடும்ப வாழ்க்கை ஆரம்பித்தான். அவனுக்கு எந்த குறைவும் இருந்ததில்லை. அலீஸ் வங்கியில் வேலைப்பார்க்கும் ஒரு அழகிய பெண்ணாக உலகத்தாருக்கு காட்சி அளித்தாள். ஆனால் அவள் சாத்தானுடைய உடன் வேலையாள் என்பது அப்போது ஆமோசுக்குத் தெரியாது. சில இரவுகளில் ஆமோஸ் எழும்பிப் பார்க்கும்போது படுக்கையில் மலைப்பாம்பு இருப்பதை பார்த்தான். பயத்தினால் சத்தமிடவும் இயலவில்லை. சில இரவுகளில் அலீஸ் திடீரென்று காணப்படாமல் போவாள். திடீரென்று வந்து விடுவாள். அறைக்குள் நூதனமான குரல்களும், நடன ஜலங்கை ஒலிகளும் ஒலிக்கும். இவைகளைக் குறித்து ஒருநாள் ஆமோஸ் அலீசிடம் கேள்விகள் கேட்கத் தொடங்கினான். உடன்தானே அவள் கடுமையாக எச்சரித்தாள்.

இரவு விடுதியில் ஆமோஸ்

ஒரு நாள் அலீஸ் ஆமோசிடம் மிகுந்த அன்பு காட்டினாள். ஏதோ ஒரு சக்தி தன்னை ஆட்கொள்வதைப் போல உணர்ந்தாள். இரவில் அவள் ஆமோஸை ஒரு இரவு விடுதி கூட்டத்துக்கு அழைத்துச் சென்றாள். அவள் மாய மந்திரங்களிலும், சாத்தானுடைய ஆவி வழிபாட்டிலும் தீவிரமாய் இருந்தாள். சாத்தனுடைய ஊழியக்காரியாகச் செயல்பட்டாள். ஆனால் இது குறித்து வெளி உலகத்திற்கு ஒன்றுமே தெரியாது. உலகத்தார் அவளை ஒரு சாதாரணப் பெண்ணாகவே பாவித்து நடத்தினார்கள். இது போன்ற அனேகப் பெண்கள் இன்று உலகத்தில் ஜீவிக்கிறார்கள் என்று ஆமோஸ் எச்சரித்திருக்கிறார்.

வீட்டில் மண்டை ஓடு

                அலீசின் இரகசியங்களைக் குறித்து ஆமோஸ் அறிய விரும்பினான். ஒருநாள் அவள் வங்கிக்குப் போன பின் அவள் வீட்டை முழுவதும் ஆமோஸ் சோதனை செய்தான். அப்போது அவன் நம்ப முடியாத காட்சிகளைப் பார்த்தான். மனிதனின் மண்டை ஓடு, எலும்புக்கூடு, காய்ந்ததும், பச்சையுமான மனித உடல் உறுப்புகள், மனித இரத்தம் நிரப்பப்பட்ட ஒரு கூஜா ஆகியவற்றைப் பார்த்து ஆமோஸ் திடுக்கிட்டான்.

சாத்தானுடைய ஆவி உலகம்

அலீஸ் ஒரு நாள் ஆவிகளின் உலகத்திற்கு ஆமோஸை அழைத்துச் சென்றாள். பூமிக்கு அடியில் உள்ள சபா மண்டபத்தில் சுமார் 500 பேர் வாலிபர்களும், இளம் பெண்களுமாகக் காணப்பட்டனர். அங்கிருந்தவர்கள் மாணவர்கள், பட்டதாரிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள் முதலானோர் ஆவர் அன்று ஆமோஸ் அக்கூட்டத்தின் அங்கத்தினராக சேர்க்கப்பட்டான்.

அலீஸின் இரகசியங்கள்

அடுத்தநாள் இரவு 2 மணிக்கு அலீஸ் ஆமோஸை எழுப்பினாள். அனேக இரகசியங்களை அவனிடம் பகிர்ந்து கொண்டாள். அவள் மற்றவர்கள் எண்ணுவது போல் ஒரு சாதாரண மனுஷி அல்ல என்றும், அவள் பாதி மனுஷீகத்திலும், பாதி ஆவி ரூபத்திலும் இருப்பதாகவும் அறைக்குள் இருக்கும் மனித இரத்தம் முதலியப் பொருட்கள் அதிகாலை சாத்தானுடைய ஜெபங்களில் பயன்படுத்துபவை என்றும், அது அவளை அன்றாட வாழ்க்கையில் வழி நடத்தும் ஆவிகளாக இருக்கின்றன என்றும் கூறினாள். அதோடு அவனுக்குச் சில மாயாஜால மந்திரப் புத்தகங்களைக் கொடுத்தாள். அப்போது அவனை அறியாத ஒரு கவர்ச்சி அவனுக்கு அந்த புத்தகங்களில் ஏற்பட்டது. இதைக்கண்ட அலீஸ் அவன் பெயரை இந்தியாவிலுள்ள ஆவி உலகத்துக்கு அனுப்பி வைத்தாள்.

ஆவி உலகத்தில் ஆமோஸ்

                ஆமோஸ் ஆவி உலகத்துக்கு மறுபடியும் கொண்டு செல்லப்பட்டான். அங்கே அங்கத்தினராகும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உடம்பில் சாந்து போன்ற ஒன்றை பூசியும், ஒரு திரவ பதார்த்தத்தைக் குடிக்கவைத்தும் வெடிமருந்து போன்ற ஒன்றைத் தலையில் பூசியும் அந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது அந்நிகழ்ச்சி இந்தியாவிலுள்ள ஆவி உலகத்தில் பதிவாயிற்று. அடுத்த நாள் அவனுக்கு இந்தியாவிலிருந்து ஒரு கடிதம் வந்தது. அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தபடி ஆமோஸ் அதை இரத்தக் கறையாக்கி ஆவி உலகம் வழி இந்தியாவுக்கு அனுப்பினார்.

அலீசுடன் உடன்படிக்கை

ஒரு நாள் இரவு 2 மணிக்கு அலீஸ் ஆமோஸைத் தட்டி எழுப்பினாள். அவளிடம் இருந்த பச்சிளம் பெண் குழந்தையின் கண்களைத் தன் கூரிய நகங்களால் பிடுங்கி எடுத்து அதைக் கதறக்கதற வெட்டி அந்தத் துண்டுகளை ஒரு தாலத்திலே வைத்து அவனிடம் சாப்பிடச் சொன்னாள். மறுக்க முடியாத ஒரு சக்தி அவனை ஆட்கொண்டபடியால் ஆமோஸ் அதை சாப்பிட ஆரம்பித்தான். இனிமேல் நடப்பவற்றை ஒருவரிடமும் சொல்ல மாட்டேன் என்று அலீஸ் அவனோடு உடன்படிக்கைப் பண்ண வைத்தாள். ஆமோஸ் பெருமளவில் மாற்றம் அடைந்தான். அதுமுதல் அவன் தனியாகக் குடியமர்த்தப்பட்டான்.

ஆமோஸின் டெல்லி வருகை

இந்தியாவின் தலைநகரமான டெல்லியிலுள்ள ஆவி வணக்கத்தாரிடமிருந்து ஆமோசுக்கு ஒரு கடிதம் கிடைத்தது. கடிதத்தில் டெல்லிக்கு செல்லும்படியாக ஒரு அழைப்பு வந்தது. அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஆணைப்படி செத்த எலிகளைச் சாப்பிட்டு, கல்லறைத் தோட்டங்களில் சென்று அங்குள்ள ஆவிகளோடு உறவு கொண்டு மேலும் கட்டளைகளுக்காக காத்திருந்தான். அந்நிலையில் இந்தியாவின் ஆவி உலகத்தைச் சேர்ந்த ஒருவன் அவனிடம் வந்து அவனை ஒரு நொடிப்பொழுதில் வானவெளி வழி டெல்லிக்குக் கொண்டு சென்றான். அங்கே ஒரு மண்டபத்திற்குள் நுழைந்தான். அவனிடம் கையெழுத்துகள் வாங்கப்பட்டது. மட்டுமல்ல புசிப்பதற்குத் துண்டாக்கப்பட்ட மனித சரீரமும் இரத்தமும் பரிமாறப்பட்டது. அதைத்தொடர்ந்து கடுமையான பல சோதனைகள் செய்யப்பட்டன. சாத்தானின் அனேக மந்திர புத்தகங்கள் அவனுக்கு அளிக்கப்பட்டன. மேலும் அவன் செய்ய வேண்டிய காரியங்கள் அவனுக்குப் போதிக்கப்பட்டன.

மறுபடியும் நைஜீரியாவுக்கு

இவைகளுக்குப் பின் ஆமோஸ் மறுபடியும் நைஜீரியாவுக்கு திரும்பிச் சென்றான். அங்கே அவன் அலீஸ் இருந்த வண்ணமாய் சாத்தானுடைய பூஜைகள் செய்து ஆவி உலகத்தின் ஒரு அங்கத்தினனாய் செயல்பட்டான். இப்போது அவன் உலகத்தின் எந்த இடத்திற்கும் ஒரு நிமிடத்தில் செல்ல வேண்டிய ஆற்றலைப் பெற்றுக்கொண்டான்.

மேலும் வல்லமை பெறுதல்

ஆமோஸ் மந்திரத்தின் உதவியால் கொடுங்காற்றை வரவழைத்து ஆகாய மண்டலங்களுக்குச் சென்று அங்குள்ள ஆவிகளோடு அதிக வல்லமைகளைப் பெற்றுக்கொண்டான். மேலும் பூமியைப் பிளந்து பாதாளத்தில் இறங்கி அங்குள்ள ஆவிகளோடும் வல்லமை பெற்றுக் கொண்டான். இப்போது தேவப் பிள்ளைகளுக்குத் தீமை விளைவிக்கும் முழு ஆற்றலையும் பெற்றுவிட்டான்.

                இந்நிலையை அடைந்த அனேகர் இன்று உலகத்தில் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனிதர்களாய் இருந்தாலும் ஆவி உலகத்தின் முழு ஆற்றலையும் பெற்றவர்கள் என்றும் விசுவாசிகள் இவைகளைக் குறித்து அறிந்திருக்க வேண்டும் என்றும் ஆமோஸ் எச்சரித்திருக்கிறான்.    

சமுத்திர ராணியைச் சந்தித்தல்

ஒருநாள் ஆவி உலகத்தின் மற்றுமோர் பெண்ணை ஆமோஸ் சந்தித்தான். அவளோடு சேர்ந்து இருவரும் ஒரு பேருந்து வழியாக கடற்கரைக்குச் சென்றார்கள். அங்கிருந்து அந்தப் பெண் அவனைக் கடல் வழியாக வெகுதூரம் அழைத்துச் சென்று பின் கடலுக்குள் இறங்கினார்கள். அங்கு ஒரு பெரியபட்டணம் காணப்பட்டது. ஆமோஸ் அந்தப் பெண்ணின் அழகிய வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டான். அப்போது அந்த பெண் தான் கடல் ராணி என்று தன்னை வெளிப்படுத்தினாள். அங்கும் அவனுக்கு மனித மாம்சம் பரிமாறப்பட்டது. கடல் ராணியின் வல்லமையினால் ஆமோஸ் ஒரு மலைப் பாம்பையும் விழுங்கி விட்டான். அவனுக்கு மேலும் அதிக வல்லமை கொடுக்கப்பட்டது. பின்பு தன் வீட்டிற்குத் திரும்பினான்.

கடலுக்குள் தொழிற்கூடங்கள்

                ஆமோஸ் மறுபடியும் ஒருநாள் கடலுக்குள் சென்று அங்குள்ள தொழிற்கூடங்களைக் கவனித்தான்.அங்கே மனுமக்களுடைய மனதை மயக்கக்கூடிய பொருட்களையும், விநோதமான கார்களையும், நவீன ஆயுதங்களையும் வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள். மற்றுமோர் இடத்தில் அழகிய துணிகள், நறுமணப் பொருட்கள், மனித சரீரத்தை அலங்கரிக்கக்கூடிய பலவிதமான வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்பட்டன. எலக்ட்ரானிக் பொருட்கள், கம்பியூட்டர்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள் உருவாக்கப்படுவதையும் அங்கு பார்த்தான். அங்கு தயாரிக்கப்பட்ட டி.வி.பெட்டி மூலம் உண்மைக் கிறிஸ்தவர்களையும், பொய்க்கிறிஸ்தவர்களையும் ஆவி உலகத்திற்கு அறிய முடிந்தது.

ஆமோஸ் சாத்தானைச் சந்தித்தல்

ஆமோஸ் நீனா என்ற பெண்ணோடு கடலுக்கடியில் சென்றான். அங்கே சாத்தானுடைய மகாநாடு நடந்தது. சாத்தான் தன் ஊழியர்களுக்கு  பல ஆலோசனைகளைக் கொடுத்தான். ஆனாலும் சாத்தான் இயேசுவின் நாமத்திற்கு நடுங்குவதை ஆமோஸ் கவனித்தான். அதிக வல்லமை பெறுவதற்காக ஆமோஸின் சரீரத்தில் அநேக பொருட்கள் செலுத்தப்பட்டன. தேவப் பிள்ளைகளுக்கு விரோதமாய் போராடுவதற்கு அவனுக்கு 16 பெண்கள் உதவியாக கொடுக்கப்பட்டார்கள். இந்தப் பெண்கள் தேவ பிள்ளைகளை வஞ்சிப்பதற்காக பாடுபடுபவர்கள். ஆலயங்களில் சென்று விசுவாசிகளைப்போல அமர்ந்துவிடுகின்றார்கள். ஆடிப்பாடி ஆராதனை செய்வார்கள். ஆனால் சிறுபிள்ளைகளை அழ வைத்து விசுவாசிகளின் கவனத்தை திசை திருப்புவார்கள்

ஆராதனை முடிவில் விசுவாசிகளிடம் உலக காரியங்கள் பேசி கேட்ட வசனத்தை விட்டு விலகச் செய்வார்கள். ஊழியரைச் சந்தித்து பாசாங்கு பண்ணவும், தொடர்ந்து அவர் வீட்டிற்கு செல்லவும், பிரசங்கியாரை வேசித்தனத்திலும் விபச்சாரத்திலும் வீழ்த்தவும் முயற்சிக்கிறார்கள்.

ஊழியரைக் கொல்லும் ஆமோஸின் முயற்சிகள்

                ஒரு குறிப்பிட்ட ஊழியரை வீழ்த்தும்படியாக முதலில் ஆமோஸ் பயிற்சி பெற்ற பெண்களை அனுப்பினான். அவர்கள் பல முறைகளில் முயற்சித்தும் அவரை அசைக்க முடியவில்லை. எனவே ஆமோஸ் அவரைக் கொல்ல திட்டமிட்டான். ஒரு நாள் அந்த ஊழியர் சந்தையில் ஒரு பொருள் வாங்குவதற்காகக் குனிந்து நிற்கையில் எண்ணெய் பீப்பாய்களை ஏற்றி வந்த வாகனத்தை அவர்மேல் மோதவிட்டான். ஆனால் அந்த வாகனம் தடுமாறி ஒரு கல்லறை தோட்ட ரஸ்தாவில் சென்று வேறுசிலரை கொன்றுவிட்டது. ஊழியரோ காப்பாற்றப் பட்டார். அதோடு அவரை கொல்லும் முயற்சி கைவிடப்படது.

வேறோர் ஊழியருக்குக் குறி

மிகுந்த வல்லமையோடு ஊழியம் செய்யும் வேறு ஓர் ஊழியரைக் கொலை செய்ய ஆமோஸ் முயற்சித்தான். அந்தப் பாஸ்டர் ரஸ்தாவில் நடந்து கொண்டிருந்தார். ஆமோஸ் சாத்தானின் வல்லமையினால் இடி மின்னலோடு கூடிய மழையை வரவழைத்தான். இடி மின்னல் வேறு சிலரைத் தாக்கியதல்லாமல் பாஸ்டரை சேதப்படுத்த இயலவில்லை. மின்னும் சுடரொளி பட்டயங்களை ஏந்திய தூதர்கள் ஊழியரைத் தப்புவித்தார்கள். ஊழியர் தேவனைத் துதிக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் பலத்த காற்று அடிக்கவே அது ஆமோஸைத் தூக்கிச்சென்று வேறொரு பட்டணத்தில் போட்டது.

உண்மையாய்த் தேவனைப் பற்றிக்கொள்ளும் தேவப் பிள்ளைகளை சாத்தானுடைய எந்தச் சக்தியாலும் மேற்கொள்ள முடியாது. அவர்களை தேவன் ஆச்சரியமாய் தப்புவிக்கிறார் என்பது ஆமோஸின் சாட்சி.

கர்த்தர் ஆமோஸை அழைத்தல்

அந்தோணி என்ற ஊழியர் ஒருவர் சிறந்த ஊழியம் செய்து வந்தார். ஒரு நாள் அவர் ஆமோஸைக் கூட்டத்திற்கு அழைத்தார். கூட்டத்தின் முடிவில் அந்தோணி கூறியபடி ஆமோஸ் முழங்காற்படியிட்டான். ஊழியரோடு அநேக விசுவாசிகளும் சேர்ந்து ஜெபித்தார்கள். அவனுக்குள்ளிருந்த அனேக ஆவிகள் வெளியேறின. ஆமோஸ் தான் பலட்சயமடைந்ததை உணர்ந்தான். ஆனால் அவன் ஆவிகளிலிருந்து முற்றிலும் விடுவிக்கப் படவில்லை. தனக்கேற்பட்ட தோல்வியில் மனம் மடிந்த ஆமோஸ் தன்னை மேலும் பொல்லாத  ஆவிகளால் பெலப்படுத்திக் கொள்ளும்படியாக லாகோசுக்கு ஒரு வாடகை காரில் திரும்பிச் சென்று கொண்டிருந்தான். அவன் செல்லும் வழியில் காரில் ஒரு சத்தம் கேட்டான். அது அவன் தாய் அவனைச் செல்லமாய் அவர்கள் மொழியில் அழைக்கும்நிகம்என்ற பெயராக இருந்தது. எவருக்குமே தெரியாத இந்தப் பெயரைச் சொல்லி யார் என்னைக் கூப்பிட்டார்கள் என்று ஆச்சரியப்படுகையில் திரும்பவும்நிகம் என்னை மறுதலிக்க மறுபடியும் போகிறாயா?” என்ற கேள்வி அவன் காதுகளில் பாய்ந்தது. சற்று நேரத்தில் பயங்கரமான காய்ச்சலால் பிடிக்கப்பட்டு ஆமோஸ் மயக்கமடைந்தான்.

ஆமோஸின் ஆவி தேவ சமூகத்தில்

மயக்கமடைந்த ஆமோஸ் ஆவியில் தேவ சமூகத்தில் கொண்டு செல்லப்பட்டான். கர்த்தர் அவனோடு இடைப்பட்டார். அவனை இரட்சித்து அநேக காட்சிகள் அளித்துப் பெலப்படுத்தினார். மந்திர சக்தியால் அவனுக்குள் புகுத்தப்பட்டிருந்த பலவித பொல்லாத சக்திகளையும் அகற்றினார். அவனுக்குள் இருந்த பொல்லாத ஆவிகளின் சக்திகளையும், மந்திர சக்திகளையும் அகற்றிவிட்டு அவனை ஒரு புது சிருஷ்டியாக்கினார்.

மீட்கப்பட்ட ஆமோஸ் ஊழியத்தில்

ஆமோஸ் கண்விழித்துப் பார்த்தபோது ஒரு வீட்டின் அறையிலுள்ள கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தார். அந்த வீட்டார், தான் மயக்கமடைந்தது முதல் சிகிட்சைகள் அளிக்கப்பட்ட மருத்துவர்களால் நம்பிக்கை அற்ற நிலையில் அங்கு வைக்கப் பட்டிருந்ததை விளக்கமாகக கூறினார்கள். ஆமோஸ் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கர்த்தர் பேசியபடி லாகோஸ் பட்டணத்துக்கு சென்றார். சாத்தானுடைய பிடிக்குள் சிக்கிக் கொண்ட ஆமோஸைக் கர்த்தர் அற்புதமாக மீட்டுக் கொண்டு தம்முடைய ஊழியத்திற்கு வல்லமையாய்ப் பயன்படுத்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்